ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார். சமீ பத்தில் நிறைவுபெற்ற தெலுங்கானா சட்ட மன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபடுவதைத் தடுப்பதாக கூறி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு வெளிப் படையான ஆதரவளித்தது. இதனால் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி மற்றும் அவரது சமுதாய வாக்குகள் நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு திரும்பின. “ஷர்மிளா வின் ஆதரவும்” சேர்ந்த நிலையில், காங்கி ரஸ் கட்சி முதன்முறையாக தெலுங்கானா வில் காலூன்றியது.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங் கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஜனவரி 4-ஆம் தேதி முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரமாக செவ்வாயன்று காலை 11 மணி அளவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி செயற் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட் டுள்ளது.
கலக்கத்தில் ஜெகன் மோகன்
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனது தங்கை ஷர்மிளா காங்கிரஸ் உடன் இணக்கம் காட்டிய பொழுதே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியானது. இந் நிலையில், தற்பொழுது ஷர்மிளா காங்கிரஸ் கட்சியிலேயே இணையவுள்ளதாக வெளி யான தகவலால் ஜெகன் மோகன் கலக்க மடைந்து உள்ளார். காரணம் ஆந்திர மாநி லத்திற்கு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்த லுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள் ளது. இந்த தேர்தலில் மாநில எதிர்க்கட்சி யான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தக வல் வெளியாகியுள்ளது. காங்கிரஸில் இணையவுள்ள ஷர்மிளா தெலுங்கானா போல ஆந்திராவிலும் களமிறங்கினால் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கி ரஸ் கட்சியின் வாக்கு வங்கி பிரிய வாய்ப் புள்ளது. இதனால் மீண்டும் ஆட்சி அமைக் கும் கனவில் இருக்கும் ஜெகன் மோகன் கடும் சேதாரத்தை எதிர்கொள்வார். ஷர் மிளாவை ஆந்திர அரசியலில் களமிறக்கி தெலுங்கானா போல ஆட்சி அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி தனியாக காய் நகர்த்தி வருவதாக மற்றொரு தகவல் வெளி யாகியுள்ளது. இப்படி பல்வேறு சுவாரஸ்ய செய்திகளால் ஆந்திர அரசியல் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
பரிதவிக்கும் பாஜக
தெலுங்கு தேசம், பவன்கல்யாணின் ஜன சேனா உடன் கூட்டணி அமைத்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் களம்காண பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தெலுங்கு தேசம் காங்கிரஸ் உடன் கைகோர்க்க தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், பாஜகவின் பெயரை கூட உச்சரிக்காமல் தெலுங்கு தேசம் தனது அரசியல் வேலையில் முழு வீச்சாக தேர்தல் பணிகளை தொடங்கி யுள்ளது. இது ஒருபுறம் என்றால் காங்கி ரஸ் கட்சி ஆந்திராவில் ஷர்மிளாவை கள மிறக்கும் நோக்கத்தில் இறங்கியுள்ளது. இத னால் பாஜக என்ன செய்வது என்று பரித வித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.